Powered By Blogger

Tuesday, June 18, 2013

ஒலியின் வலி ...


அதிகாலை சேவல் கூவும் குரல் , 
சூரிய கதிர்களோடு , ஜன்னலில்,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம், 
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின், 
புதிய பாடல்கள், மதிய 
உணவுக்கும், சேர்த்து சமைக்கும், 
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம், 
இவை அனைத்துமே இன்று, 
கைபேசி அலாரங்களாலும் , 
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி 
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் , 
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை , 
புதைக்கப்பட்டுவிட்டன... 

No comments:

Post a Comment