அதிகாலை சேவல் கூவும் குரல் ,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம்,
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின்,
புதிய பாடல்கள், மதிய
உணவுக்கும், சேர்த்து சமைக்கும்,
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம்,
இவை அனைத்துமே இன்று,
கைபேசி அலாரங்களாலும் ,
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் ,
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை ,
புதைக்கப்பட்டுவிட்டன...
No comments:
Post a Comment