Powered By Blogger

Thursday, August 29, 2013

கோகுலாஷ்டமி




கண்ணனின் பிறந்த தின திருவிழா ..
வெண்ணையும், இனிப்பும் படையல் , 
என் கைகளால் செய்தேன் ..
வெண்ணை திருடனின் கால் தடங்களும் , 
என் கைகளால் செய்தேன் ,
கால் தடங்கள் பதிக்க , 
எந்த கண்ணனும்  இல்லையே ...
என் வீட்டினில்..


Saturday, August 3, 2013

நட்பு ...

நான் தோல்வியில் துவளும்போழுது , என்னை 
தோள் கொடுத்து தாங்கவில்லை ,.. நீ ..
தாங்க இயலாத சோதனைகளை வாழ்வில் சந்திக்கையில் , 
என் சோதனைகளை  களையவில்லை .. நீ ..
கண்களில் கண்ணீருடன் நான் தவிக்கும் பொழுது , 
உன் கை விரல்களால் கண்ணீரை துடைக்கவில்லை நீ ..
உறவுகள் அனைத்தும், உதறி சென்ற பொழுது , 
உடன் வரவில்லை நீ ...

மாறாக, நான் துவளும்போழுது , தோள்களில் தட்டி கொடுத்தாய் , 
வெற்றி பெற வைத்தாய் .. நீ 
என்  சோதனைகளை , சாதனைகளாக மாற்ற கற்று கொடுத்தாய் , 
கடக்க வைத்தாய் நீ ..
என்னை புன்னகை புரிய வைத்து , என் விரல்களால் , 
கண்ணீரை  துடைக்க  செய்தாய் நீ ..
புது உறவுகளை என் வாழ்வில் , 
பூக்க செய்தாய் நீ ....
நாம் கண்ணீர் சிந்தினாலும் , புன்னகை செய்தாலும் , 
புன்னகையை மட்டுமே  பதிலாக , படைக்கும் , 
தெய்வத்தை  போன்றவள் நீ .. என் தோழி ...