Powered By Blogger

Monday, December 9, 2013

கனவுகள்

எத்தனை முறை பொய்த்தாலும் ,
கனவுகள் காண்பதை
கண்களும் , கைவிடவில்லை ,
பொய்ப்பதை
கனவுகளும்
கைவிடவில்லை ..
கனவுகள்
கனவுகளாகவே ..

Thursday, August 29, 2013

கோகுலாஷ்டமி




கண்ணனின் பிறந்த தின திருவிழா ..
வெண்ணையும், இனிப்பும் படையல் , 
என் கைகளால் செய்தேன் ..
வெண்ணை திருடனின் கால் தடங்களும் , 
என் கைகளால் செய்தேன் ,
கால் தடங்கள் பதிக்க , 
எந்த கண்ணனும்  இல்லையே ...
என் வீட்டினில்..


Saturday, August 3, 2013

நட்பு ...

நான் தோல்வியில் துவளும்போழுது , என்னை 
தோள் கொடுத்து தாங்கவில்லை ,.. நீ ..
தாங்க இயலாத சோதனைகளை வாழ்வில் சந்திக்கையில் , 
என் சோதனைகளை  களையவில்லை .. நீ ..
கண்களில் கண்ணீருடன் நான் தவிக்கும் பொழுது , 
உன் கை விரல்களால் கண்ணீரை துடைக்கவில்லை நீ ..
உறவுகள் அனைத்தும், உதறி சென்ற பொழுது , 
உடன் வரவில்லை நீ ...

மாறாக, நான் துவளும்போழுது , தோள்களில் தட்டி கொடுத்தாய் , 
வெற்றி பெற வைத்தாய் .. நீ 
என்  சோதனைகளை , சாதனைகளாக மாற்ற கற்று கொடுத்தாய் , 
கடக்க வைத்தாய் நீ ..
என்னை புன்னகை புரிய வைத்து , என் விரல்களால் , 
கண்ணீரை  துடைக்க  செய்தாய் நீ ..
புது உறவுகளை என் வாழ்வில் , 
பூக்க செய்தாய் நீ ....
நாம் கண்ணீர் சிந்தினாலும் , புன்னகை செய்தாலும் , 
புன்னகையை மட்டுமே  பதிலாக , படைக்கும் , 
தெய்வத்தை  போன்றவள் நீ .. என் தோழி ...

Tuesday, July 23, 2013

கோவில்,..




சிறு வயதில் பக்தியோடு மட்டுமே,  வலம் வந்த கோவிலை, 
இன்று உன் கரம் பிடித்து வலம் வருகிறேன், சிறு வெட்கத்தோடும் , 
சிறு காதலோடும் கூடிய பக்தியோடு... 
பச்சை பட்டுடுத்தி , மூக்குத்தியின் ஒளி மிளிர, காட்சி கொடுக்கும் 
அம்மனை கை கூப்பி  தொழுகையில் , கண்களில் ஏனோ கண்ணீர் ..
பக்தியிலா , இல்லை, .. உன் அருகில் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்திலா, 
புரியவில்லை .. 
சிறுமியாக பெற்றோருடன் அமர்ந்த தெப்பகுள படித்துறை, 
அன்று பிரசாதம் அருந்த மட்டுமே பிடிக்கும்.. 
இன்று உன்னோடு அமர்ந்திருக்கையில் , ரசிக்கிறேன், 
சுற்றியுள்ள காற்றையும் , நம்மோடு அமர்ந்திருக்கும் 
ஜோடிகளையும் ..., பொற்றாமரை குளத்தில், தாமரைகளை 
தேடும் உன் மலர்ந்த  முகத்தையும்.. 









Friday, June 28, 2013

மேல் மாடத்து ரோஜா


புகைப்படத்தை பார்த்து ,
உன்னை என் வாழ்க்கை
துணையாக ஏற்றதால் , 
ஆச்சரியம் கொள்ளும் 
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் 
தெரியாது....
உன் புகைப்படத்தை பார்த்து 
என்னுள் பூத்த காதல் ,
மேல் மாடத்து, பூந்தொட்டியில் , 
பூத்த  ரோஜாவை போன்று , 
அழகானது என்று.. 

Tuesday, June 25, 2013

பேருந்தில் குழந்தை


பேருந்தில் குழந்தை 
அம்மு, அழகி ..
கண்ணா, குட்டி..
செல்லம், தங்கம் ..
பட்டு, பாப்பு  என்று
வார்த்தைகளை ,
உச்சரிக்கும் முன்னரே,
மடியில் , தாவி
ஏறியது, பேருந்தில்
அருகில் அமர்ந்திருந்த,
குழந்தை ...

Monday, June 24, 2013

மழைக்கால காதல்


ஆயிரம் குறுஞ்செய்திகள் , 
சொல்லிய காதலை விட ,
மழைக்கால பருவத்தின்,
தேநீர் நேரத்தில், என்னை ,
ரசித்த உன் கண்கள், 
உணர்த்தியது அதிக காதலை...

Tuesday, June 18, 2013

ஒலியின் வலி ...


அதிகாலை சேவல் கூவும் குரல் , 
சூரிய கதிர்களோடு , ஜன்னலில்,
வந்தமரும், குருவிகளின் மெல்லிய சத்தம், 
மொட்டை மாடியில் உரக்க படிக்கும்,
குழந்தைகளின் உற்சாகக்குரல்,
இலங்கை வானொலியின், 
புதிய பாடல்கள், மதிய 
உணவுக்கும், சேர்த்து சமைக்கும், 
அம்மாவின், அம்மியின் ரம்மிய சத்தம், 
இவை அனைத்துமே இன்று, 
கைபேசி அலாரங்களாலும் , 
வீட்டு வாசலுக்கு வரும் பள்ளி 
வாகன ஒலியினாலும் , ..
தொலைகாட்சியின் விளம்பரங்களாலும் , 
மின் அம்மியின் சத்தங்களாலும் ,
மறக்கப்படவோ, மறைக்கப்படவோ ..இல்லை , 
புதைக்கப்பட்டுவிட்டன... 

Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

தந்தையர் தினம்.. , உலகமே கொண்டாடுகிறது..
உங்களை கொண்டாடி வாழ்த்துகள், சொல்ல 
அருகில் நீங்கள் இல்லை. ..
நீங்கள் இவ்வுலகில் இருந்த காலங்களில், 
தந்தையர் தினம், என்கிற வழக்கமே இல்லை,
வருந்துகிறேன் இன்று.. , 
வாழ்த்துக்களும் உரைத்தேன் , காற்றோடு, 
உங்கள் செவிகளை, அடைந்த மகிழ்ச்சியுடன், 
தைரியமாக, வாழ்க்கையை,வாழ 
துவங்கினேன் தந்தையே. ..

Saturday, June 15, 2013

இணைய வலைபதிவுகள்

அன்பின் அறிவூட்டம் ,
எண்ணங்களின் எழுத்தோட்டம் , 
உணர்வுகளின் உயிரூட்டம்,
தமிழின் தேரோட்டம் ,
கனவுகளின் கருத்தோட்டம் ,
காதலின் கற்பனைதோட்டம் ,
கவிதையின், கால ஓட்டம் இணையத்தின் 
வலைபதிவுகள் ..

Friday, June 14, 2013

கணவன் மனைவி

கணவன் மனைவி
ஜெயுமான்

காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், 
அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே 
அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் 
மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்...

Wednesday, June 12, 2013

மழைகால மேகங்கள்..

அடர்ந்த , மழைகால மேகங்கள் , 
மழையை பொழிவதற்கு முன்பு , 
நீல நிறத்து, சீதையின் ராமனையும், ...
கருமை நிறத்து, ராதையின் கண்ணனையும், 
ஏனோ நினைவு கூறுகின்றன ....



Tuesday, May 28, 2013

என் கவிதை

நான் படிக்காத , பார்க்காத , உணராத ..
கவிதை , 
என் குழந்தை ..

Tuesday, March 19, 2013

தனிமையில் வெறுமை


விளையாடும் சிறுவர்கள்..
தீவிர உடற்பயிற்சியில் நடுத்தர வயது மக்கள் ,
உடலின் நன்மைக்காக , நடை பயிற்சியில்
கவனம் செலுத்தும் பெரியோர்கள் ,
காலை இளம் தென்றல் ..
அதிகாலை சூரியன் ,
என்று .... நிரம்பி வழியும் பூங்காவில் ...
அருகில் நடக்க உன் பாதங்கள் இல்லாமல் ,
என் குரலுக்கு செவி கொடுக்க நீ இல்லாமல் ,
என் மனது மட்டும் வெறுமையாய்..



Saturday, November 17, 2012

பிறிதொரு ஜென்மம் வேண்டும்

பிறிதொரு ஜென்மம் வேண்டும்,
கேட்க மறந்த  பாடல்களை கேட்பதற்கும்,
பழக மறந்த மனிதர்களுடன் உறவாடுவதற்கும் ,
சொல்ல மறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் ,
நண்பர்களுடன் , செலவிடாத நேரங்களை பொக்கிஷபடுத்தவும் ,
பாதியில் முடிந்து போன என் தந்தையின் ஆயுளை நீடிக்கவும் , 
என் அன்பு கணவனிடம் , மறைத்த அன்பினை சொல்லவும் , 
பாதி மாதங்களில் சென்ற என் தங்க மகனை , 
ஒரு ஆண் குழந்தையாக பெற்று வளர்க்க , 
பிறிதொரு ஜென்மம் வேண்டும்........

Saturday, November 3, 2012

கடல்


மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து ,
பின் கரையை தொட்டவுடன் .
அடங்கி விடும் அலைகளை ,

Wednesday, October 24, 2012

முரண் -தாய்மை

குழந்தையின் , முதல் அழுகையை 
சிரித்து , ரசிப்பதும் , 
முதல் சிரிப்பை அழுது 
ரசிப்பதும் , 
தாய்மையில் மட்டுமே ...

Saturday, October 20, 2012

கடவுள்


கடவுள் , எந்த வடிவில் இருப்பார் ?
எந்த மொழியில் பேசுவார் ?
எந்த மொழிக்கு செவி கொடுப்பார் ..
என்பது மட்டும் தெரிந்தால் போதும் ,
என்னுடைய எந்த மொழியையும் 
கேட்பதில்லை அவர் ...

Sunday, October 14, 2012

சந்தோஷம்

கடற்கரையில் நடக்கும்போதும் , 
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் , 
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும் 
வாழ்க்கை , சந்தோஷமாகவே ...