அண்ணாச்சி கடையில ,
மளிகை சாமான் வாங்கையில,
கல்லும் மண்ணும் கிடக்குதுனு ,
பள பள மாளிகை கடையில ,
மளிகை சாமான் வாங்கினோம்,
பாலிதீன் பைகளில் பெருமையுடன்
சுமந்து வந்தோம்...
பால்கார அண்ணாச்சி , பால்ல தண்ணீர்
கலந்திருக்காருனு , சொல்லி, சோப்பு நூறை
கலந்த , பாக்கெட் பால் வாங்கி குடிச்சோம்,
கூடைக்கார கிழவி , பூச்சி வந்த கத்திரிகையும்,
வண்டு வந்த மாம்பழமும் , வைச்சுருகான்னு ,
பூச்சி கூட வேண்டாம்னு சொன்ன , காய்கறிகளையும் ,
பழங்களையும், பழமுதிற்சோலைகளில்,
பதவிசாக வாங்கி தின்னோம்,
இன்னைக்கு, அண்ணாச்சியும், கிழவியும்,
வீதியில பார்கையில, " ஏலே மக்கா நல்லா இருக்கியாலே "
என்று கேட்கையிலே , மருந்து கடையில வாங்கின,
மருந்து சாமான எங்க போய் மறைக்க... ??