Powered By Blogger

Thursday, June 24, 2021

உருமாறிய வாழ்வியல்

 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை,

வகுப்பறைகள்,  மின்னணு கருவிகளில்... 

கோவில்கள் திறக்கப்படவில்லை, 

பூஜைகள் காணொளிகளில்.. .. 

அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, 

கணினிகளில் அலுவல் அறைகள்... 

வீடுகளில் தனிமை இல்லை, 

தனிமைப்படுத்த அறைகள் உண்டு... 

திருமணங்களில் கேளிக்கைகளில்லை,

பந்திகளில் எண்ணிக்கை ... 

இறப்பிற்கு அழுகை இல்லை

மனித மனம் மரத்துபோகின்றது... 

கடந்தகால வேதனைகளில்லை, 

நிகழ்காலம் மகிழ்ச்சியாக இல்லை... 

எதிர்காலத்தில், கடந்தகாலங்களை

எதிர்நோக்கி மனித மனம் !!!!