கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை .. மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில் சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை.. செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் , வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு... ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து ஆயிற்று .. ஓராண்டு .. |
Saturday, April 4, 2020
அகல்யா
யதார்த்தம்
நாம் இருவர், நமக்கு இருவர் என்ற அறிவிப்பு பலகைகள், நாடெங்கும் ..
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...
Subscribe to:
Posts (Atom)