Powered By Blogger

Saturday, April 4, 2020

அகல்யா

கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை ..
மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில்
சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை..
செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , 
தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் ,
வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு...
ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து
ஆயிற்று .. ஓராண்டு ..

யதார்த்தம்

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற அறிவிப்பு பலகைகள், நாடெங்கும் ..
முப்பது வருடங்களுக்கு முன்பு ...
நாம் இருவர், நமக்கு ஒருவர் என்று மாறின,
இருபது வருடங்களுக்கு முன்பு,
கடவுள் , அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்,
நாமே குழந்தை ,, நமக்கேன் குழந்தை .. என்ற அறிவிப்பு,
பத்து வருடங்களுக்கு முன்பு ,,
இன்று கடவுளின் திருவிளையாடல் , நாடெங்கும் ,
கருவுறுதல் மையங்கள், ...