கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை .. மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில் சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை.. செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் , வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு... ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து ஆயிற்று .. ஓராண்டு .. |
No comments:
Post a Comment