ஒற்றைச் சொல் , உயிரையும் உணர்வையும் , கொடுத்திட்ட அந்த ஒற்றை உறவு,
மரணம் பிரித்ததாக, பூவுலகம் தரும் நம்பிக்கை..
உண்மையல்ல , என் மரணம் வரையிலும் பிடித்திருக்கும் தங்கள் கை ..
ஒற்றைச் சொல் , உயிரையும் உணர்வையும் , கொடுத்திட்ட அந்த ஒற்றை உறவு,
மரணம் பிரித்ததாக, பூவுலகம் தரும் நம்பிக்கை..
உண்மையல்ல , என் மரணம் வரையிலும் பிடித்திருக்கும் தங்கள் கை ..
பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை,
வகுப்பறைகள், மின்னணு கருவிகளில்...
கோவில்கள் திறக்கப்படவில்லை,
பூஜைகள் காணொளிகளில்.. ..
அலுவலகங்கள் திறக்கப்படவில்லை,
கணினிகளில் அலுவல் அறைகள்...
வீடுகளில் தனிமை இல்லை,
தனிமைப்படுத்த அறைகள் உண்டு...
திருமணங்களில் கேளிக்கைகளில்லை,
பந்திகளில் எண்ணிக்கை ...
இறப்பிற்கு அழுகை இல்லை
மனித மனம் மரத்துபோகின்றது...
கடந்தகால வேதனைகளில்லை,
நிகழ்காலம் மகிழ்ச்சியாக இல்லை...
எதிர்காலத்தில், கடந்தகாலங்களை
எதிர்நோக்கி மனித மனம் !!!!
கண்களில் கண்ணீருடனும் , கற்பனைகளோடும் , கனவுகளில் ..
சுமந்தேன் ஐந்து ஆண்டுகள் உன்னை .. மனதில் மகிழ்ச்சியுடனும, மசக்கையோடும், கருவறையில் சுமந்தேன் இரு ஐந்து திங்கள் உன்னை.. செல்ல சிணுங்கல்கள் , அழுகைகள், கள்ள சிரிப்புகள் , தாவி தவழ்ந்தும் , தத்தி நடந்தும் , கண்கொள்ளா அழகுடன் , வலம் வந்த உன்னை என் உலகினில் சுமந்தேன் ஓராண்டு... ஆம், என் தங்க பெண்ணே அகல்யா .. உன்னை சுமந்த அந்த நொடி கடந்து ஆயிற்று .. ஓராண்டு .. |